கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை நேரில் அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கடந்த ஆண்டு டவுன்ஹால் பகுதியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு வழக்கு சம்பந்தமாக தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 13 வது நபராக அசாருதீன் என்பவர் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவர் கொச்சி சிறையில் வேறொரு வழக்கு சம்பந்தமாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவ்வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற அனுமதி பெற்று NIA அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அசாருதீனை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் 12வது நபராக கைது செய்யப்பட்ட இத்ரீஸ் என்பவரையும் விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.
கோவையில் அவ்வப்போது இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களை நேரடியாக அழைத்து வந்து அவர்களது இல்லங்களிலும் பல்வேறு இடங்களிலும் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.