Categories: தமிழகம்

தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பு…? தஞ்சையில் மூன்று இடங்களில் என்.ஐ.ஏ சோதனை…

தஞ்சை : தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பு இருப்பதாக புகாரின் அடிப்படையில் தஞ்சையில் மூன்று இடங்களில் தேசிய குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சோதனை சோதனையின் முடிவில் 3 நபர்களுடைய செல்போன்கள் அவற்றை எடுத்துச் சென்றனர்.

கிலாபத் இயக்கம் என்ற அமைப்பானது பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், மேலும் இந்து சமயத்தை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிட்டும் வந்ததால் இது தொடர்பாக கடந்த ஆண்டு மதுரையில் கிலாபத் இயக்கத்தை சேர்ந்த அப்துல்காதர் என்பவரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கிலாபத் இயக்கத்தில் தொடர்புடைய திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் என்பரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், தஞ்சை மகர்நோன்புசாவடி தைக்கால் தெருவை சேர்ந்த மெக்கானிக் அப்துல் காதர் (49), அதே பகுதியை சேர்ந்த முகமது யாசின் (30), காவேரி நகரை சேர்ந்த அகமது (37) ஆகிய 3 பேருக்கும் கிலாபத் இயக்கத்தில் தொடர்பு உள்ளது என்று மன்னை பாபு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை தஞ்சை மகர்நோன்புசாவடியில் உள்ள அப்துல்காதர், முகமதுயாசின் மற்றும் காவேரி நகர் அகமது ஆகியோர் வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாக பிரிந்து சென்றனர். வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டி சோதனை நடத்தினர்.

ஏதாவது ஆவணங்கள் கிடைக்கிறதா என சோதனையிட்டனர். அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தியதை தொடர்ந்து விசாரணை முடிவில் அவர்களுக்கு கிலாபத் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? மன்னை பாபா கூறியது உண்மையா? என்பது குறித்தும் இதையொட்டி 3 வீடுகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், அவர்கள் 3 பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் கோஷமிட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் நடப்பதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்இந்த சம்பவத்தால் தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது. தஞ்சையில் மூன்று இடங்களில் நடைபெற்ற தேசிய குற்றப் புலனாய்வு சோதனை 5:30 மணிக்கு தொடங்கி 10 நிறைவடைந்தது. மூன்று நபர்கள் உடைய செல்போன்கள் எடுத்துச் சென்றனர். மேலும் அப்துல் காதர் உடைய ஆதார் அட்டை வாக்காளர் அட்டை பேன் கார்டு எடுத்து சென்றுள்ளனர்.

KavinKumar

Recent Posts

கமிஷ்னர் சென்ற கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. பரபரப்பு : விசாரணையில் இறங்கிய புலனாய்வு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…

1 hour ago

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…

2 hours ago

திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ

எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

2 hours ago

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…

2 hours ago

வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் அடித்த நட்சத்திர ஜோடி.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே!

சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…

3 hours ago

வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…

யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…

3 hours ago

This website uses cookies.