Categories: தமிழகம்

போலி அமெரிக்க டாலரை கொடுத்து இந்திய ரூபாயை பெற்று நூதன மோசடி.. ஈரோட்டில் நைஜீரியன் கைது..!!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தேவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார், அபி டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ்
என்ற பெயரில் ஈரோட்டில் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார்.

இவரது டிராவல்ஸ் ஏஜென்சி மூலமாக தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் பணம் மாற்றி கொடுப்பது, விமான டிக்கெட், ரயில் டிக்கெட், கோவில்களுக்கு சென்றுவர முன்பதிவு செய்வது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார்.

இதற்காக தனது இணையதளம் மூலமாக விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை செய்து வந்தார். இந்நிலையில் அசோக்குமார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது டிராவல்ஸ் ஏஜென்சியை மூடிவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனாலும் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கேட்கும் பொழுது வெளிநாட்டு பணத்திற்கு இந்திய பணத்தை மாற்றி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு (Nathan ikechukwu) (age-42) என்பவர் இணையதள விளம்பரத்தின் மூலம் அசோக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு மருத்துவமனை சிகிச்சைக்காக அவசரமாக 500 டாலர் அமெரிக்க மதிப்பு கரன்சிக்கு பதிலாக இந்திய ரூபாயில் பணம் தேவை என கூறி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து அசோக்குமார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலைக்கு குறிப்பிட்ட இடத்திற்கு நாதன் இகேச்சுக்வுவை வரச் சொல்லி 500 அமெரிக்க டாலர் பணத்தைக் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக இந்திய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

பின்னர், அமெரிக்க டாலரை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரியவந்தது. இதனால், ஏமாற்றப்பட்டதை அறிந்த அசோக் குமார் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் இடம் புகார் தெரிவித்தார்.

இதன் பேரில் தனிப்படை அமைத்த காவல்துறையினர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வுவை கைது செய்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி ஜவுளி விற்பனை செய்து வந்ததும், ஏற்கனவே கோவை காட்டூர் பகுதியில் இதேபோன்று வெளிநாட்டு கரன்சியை போலியாக கொடுத்து கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நாதன் இகேச்சுக்வு.வை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். ஈரோட்டில் அமெரிக்க டாலர் மதிப்பிலான போலியான பணத்தை கொடுத்து ஏமாற்றிய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

21 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

23 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

23 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

1 day ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.