நீலகிரி ; முதுமலை புலிகள் காப்பகம் அருகே இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடியின் வீடியோ வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை, கரடி, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வரத் தொடங்கி உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது இலையுதிர் காலம் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் கரடி, புலி போன்ற வனவிலங்குகள் நடமாட்டத்தை காண முடிகிறது.
இந்நிலையில் மாயார் சாலையில் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது. சாலையோரத்தில் இருந்த இலந்தை பழம் மரத்தில் ஏறி பழங்களை சாப்பிட முயன்றது. இந்த காட்சிகளை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படம் பிடித்தனர். தற்போது கரடி மரத்தில் ஏறும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இவ்வாறு சாலை ஓரங்களில் வரும் வனவிலங்குகளை எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.