முதியோர் இல்லத்தில் மூதாட்டிகளின் நடனத்தை பார்த்து நீலகிரி ஆட்சியர் அருணா கதறி அழுத சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் நூறு வயதை கடந்த முதியவர்களை கௌரவப்படுத்தும் விழாவானது நடைபெற்றது. அதில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. அருணா கலந்து கொண்டார். அப்போது, பெற்ற மகன் மற்றும் மகள்களால் கைவிடப்பட்ட தாய் மற்றும் தந்தையர்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
அந்த நிர்வாகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் முன்பாக, தமிழ் பாடல் ஆன ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் அம்மாவை வாங்க முடியுமா..?’ என்ற பாடலுக்கு அங்கு உள்ள முதியவர்கள் நடனம் ஆடினார்கள்.
இதனை கண்டு களித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனைக் கண்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சமாதானம் செய்தனர்.
இதனை அடுத்து அங்குள்ள மூதாட்டிகள் மற்றும் பெரியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு சோகத்துடன் சென்றது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
This website uses cookies.