முதுமலை வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை தாக்க சென்ற யானையின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தற்போது கடும் வரட்சி நிலவுகிறது. இதனால், காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் குடிநீர் தேடி பிரதான சாலைகளை அடிக்கடி கடந்து செல்கின்றன. மாலை நேரங்களில் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சாலைகளில் பயணிக்கின்றனர்.
மேலும் படிக்க: முதலமைச்சருக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம் : ரூ.3.60 கோடி பறிமுதல் செய்ததால் பரபரப்பு!!
இந்த நிலையில் மசினகுடியில் இருந்து மாயார் செல்லக்கூடிய சாலையில் சுற்றுலா பயணிகள் செல்லும் பொழுது இரண்டு காட்டு யானைகள் சாலையை கடக்க வந்தன. அந்த சமயம், திடீரென சுற்றுலா பயணிகள் வாகனத்தை கண்ட காட்டு யானை புழுதி பறக்க வாகனத்தை தாக்க ஓடி சென்றது. அப்போது சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கூச்சலிட்டனர்.
பின்பு சுற்றுலாப் பயணிகள் வேகமாக வாகனத்தை எடுத்து தப்பித்தனர். இதனால் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் சுற்றுலா பயணிகள் தப்பித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.