தொடர் கனமழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையால் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரம் விழுந்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
குறிப்பாக, குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் மற்றும் மண்சரிவு, பாறைகள் விழுந்ததால் இன்று அதிகாலை முதலே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், குன்னூர் – மேட்டுபாளையம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நான்கு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.