கடலூர் ; கடலூர் என்எல்சி விவகாரம் தொடர்பாக விண்ணப்ப படிவத்துடன் வந்த திமுக கவுன்சிலரை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராம மக்களிடம் திமுக கவுன்சிலர் செல்வராசு என்பவர் தலைமையில், கத்தாழை ஊராட்சி செயலர் முன்னிலையில் எங்கள் பகுதி மனை, நிலங்களை நாங்கள் அளக்க சம்மதிக்கிறோம் என்று நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட படிவத்தை காட்டி சிலரிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியை தொடங்கினர்.
இதனை அறிந்த கரிவெட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு திமுக கவுன்சிலரை சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேசாமல் திரும்பிச் செல்லுங்கள் எனவும், எங்களது கோரிக்கை சமகால இழப்பீடு வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை, அதை நிறைவேற்றி விட்டு உள்ளே வாருங்கள் எனவும், கரிவெட்டி கிராம மக்கள் திமுக கவுன்சிலர் மற்றும் ஊராட்சி செயலரை திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் என்எல்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட நிலம், மனல அளவீடு செய்வதற்கான படிவத்தை நில எடுப்பு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் என்எல்சி அதிகாரிகள் தான் நேரில் சென்று கிராம மக்களிடம் ஒப்புதல் பெற்று படிவம் கையெழுத்து வாங்க வேண்டும்.
ஆனால் திமுக கவுன்சிலர் தலைமையில் படிவத்தில் கையெழுத்து வாங்க முயற்சி செய்த சம்பவம் கிராம மக்களிடையே கடும் அதிருப்தியையும் வேதனையும் ஏற்படுத்தி வருகிறது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.