Categories: தமிழகம்

கைது செய்யல.. சரணடைந்தோம் என குற்றவாளிகளே சொல்றாங்க : திமுக அரசை நெருக்கும் பிரேமலதா!

பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு முதல்வரின் சொந்த தொகுதியில், மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பாட்டார். நான் நேற்றே இறுதி அஞ்சலி செலுத்தினேன்.

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதுப் பல படுகொலைகள் நடந்துள்ளது. கடந்த மூன்று மாதத்தில் 6 படுகொலை நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் கொலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை‌‌. சேலம் சன்முகம் கொலை, ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகவினரை கைது செய்துள்ளனர். இவர்கள் 8 பேரும் கைது செய்யப்படவில்லை. அவர்களாகவே சரண்டர் ஆனர்கள்.ஆனால் முதல்வரின் காவல் துறை கைது செய்ததாக தவறாக சொல்கிறார்கள்‌.

கள்ளக்குறிச்சியில் 70 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்த கொலை, உயிரிழ்ப்பு போன்ற பாதிப்புகள் எல்லாம் பட்டியல் இன மக்களுக்கு தான் வருகிறது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள திருமா, செல்வப்பெருந்தகை இருவரும், கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என சொல்கின்றனர். பட்டியல் சமூக மக்களின் பாதுகாவர்கள் என சொல்லும் திமுக தற்போது பட்டியல் சமூக மக்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது. என பட்டியல் சமுக மக்கள் சார்பாக கேள்வி எழுப்புகிறேன்.

நாடாளுமன்ற தேர்தலில் செய்க்கூலி, சேதாரம் இல்லாமல் 40/40 வென்றெடுத்ததாக முதல்வர் சொல்கிறார். ஆனால் பட்டியல் சமூக மக்களுக்கு தினுமும் சேதாரம் ஏற்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் திமுகவினர் தான் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் மதுவில் கிக் இல்லை என சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்னிலையில் பேசுகிறார். தமிழ்நாட்டில் அரசு மதுபான கடையை மூட வேண்டும் என தேமுதிக வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் அதிகளவில் போதைப்பொருள் புழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநரை நேரடியாக சந்தித்து மனு அளித்தோம்.

ஆனால் போதைப்பொருளை விட ட்ரக்ஸ் கொடூரமான போதைப்பொருள் இது இளைஞர்ஙளை குறி வைத்து விற்பனை செய்யப்படுகிறது‌ என ஆளூநர் ரவி எங்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்தாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனை முதல்வர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

விக்கிரவாண்டி தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்க போகிறோம். இதில் இடைத்தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என்பதற்கும் ஒரே பொருள் தான். தமிழகத்தில் எல்லாத் தேர்தலிலும் தேமுதிக போட்டுயிட்டது. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக பணம் அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அராஜகம் செய்து வெற்றி பெற்றனர்.

ஆனால் இதை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் எதற்கோ சட்டத்திருத்தம் கொண்டு வருகிறார்கள் தேர்தலில் முறைகேடு செய்பவர்கள் மீது ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நாங்கள் போட்டியிடவில்லை என பிரேமலாதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

13 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

14 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

15 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

16 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

16 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

17 hours ago

This website uses cookies.