திமுகவில் எத்தனை கட்சிகள் கூட்டணி போட்டாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது : முன்னாள் எம்பி பேச்சு!
திருவள்ளூர் மாவட்டம் அருமந்தையில் அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநில மாணவரணி செயலாளர் எஸ் ஆர் விஜயகுமார் முன்னாள் எம்பி கலந்து கொண்டு பொதுக் கூட்டத்தில் பேசுகையில் சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வருவது என்றால் அதிமுகவில் மட்டும்தான் முடியும் என்றும் திமுகவில் அமைச்சரின் மகன் வாரிசுகள் குடும்பத்தினர் மட்டுமே எம்பியாகவும் எம்எல்ஏவாகவும் வர முடியும் என்றும் அதிமுகவில் உழைத்தால் உயர்ந்த பதவிக்கு சாதாரண தொண்டனும் வரமுடியும் என்றும்
15 கட்சி கூட்டணி வந்தாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது என பேசினார்.
மேலும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை உரிமைத்தொகை
வெள்ள நிவாரணம் போன்றவை முறையாக வழங்கவில்லை என்றும்
அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருப்பதாகவும்
போக்குவரத்து தொழிலாளர்கள் மாணவர் சமுதாயம் போராடிக் கொண்டிருப்பதாகவும், பெண்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறிய அவர், கச்சத்தீவு காவேரி பிரச்சனை மீத்தேனில் கையெழுத்து இட்டது என அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு எல்லா உரிமைகளையும் காவு கொடுத்துவிட்டு உரிமை மீட்பு மாநாடு நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார் .
பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் தையல் இயந்திரம்
இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில்
மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.