Categories: தமிழகம்

யார் என்ன சொன்னாலும் 3வது முறையாக ஆட்சியில் அமரப் போகிறார் பிரதமர் மோடி : அண்ணாமலை சூளுரை!

யார் என்ன சொன்னாலும் 3வது முறையாக ஆட்சியில் அமரப் போகிறார் பிரதமர் மோடி : அண்ணாமலை சூளுரை!

என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று 400 எம்பிக்களை தாண்டி ஆட்சியில் அமரவுள்ளார். அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 39 எம்பிக்கள் அமர்த்தி அழகு பார்க்கப்படும். இந்த யாத்திரைக்காக கடுமையாக உழைத்துள்ளோம். நம் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வருகிறோம்.

நாம் செய்யவேண்டியது இன்னும் பாக்கி உள்ளது. நம் பணி என்பது இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எல்லோருடைய உழைப்பையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஓய்வு இல்லை. இதனை மக்களாகிய நீங்கள் செய்து காட்டவேண்டும்.

10 ஆண்டுகள் கழித்து திரும்பி பார்க்கும்போது தமிழகத்தின் மாற்றம் பல்லடத்தில் இருந்து நடந்தது என்ற சரித்திரத்தில் நாம் இருப்போம். பட்டிதொட்டி எங்கும் பிரதமர் மோடியின் புகழ் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் மோடி மோடி என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே, 2014 மற்றும் 2019ல் செய்த தவறை தமிழக மக்கள் மீண்டும் செய்யப் போவதில்லை. பொய் பரப்புரைகளுக்கு செவி சாய்க்கமாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் கூட இந்த தேர்தலில் 3வது முறையாக ஆட்சியில் மோடி அமர போகிறார் என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், 400 எம்பிகளை தாண்டி 450 வரை எடுத்து செல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை கொடுக்க வேண்டும்.

நிச்சயமாக தமிழக மக்கள் அதனை செய்வார்கள். இந்த மாநாடு முடிந்து தமிழகம் முழுவதும் செல்லும்போது அர்ப்பணிப்புடன் பிரதமர் மோடிக்காக பாடுபட வேண்டும். கண்டிப்பாக பாஜக கட்சி தமிழக மக்களுடன் இருக்கும். தமிழக மக்கள் கனவு காணும் தமிழகத்தை உருவாக்கி காட்டுவோம் என்று சத்தியமிடுகிறேன் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

2 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

3 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

4 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

4 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

4 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

5 hours ago

This website uses cookies.