பெண்களை தவறாக பேசக்கூடிய உரிமை யாருக்கும் கிடையாது : மன்சூர் அலிகான விவகாரத்தில் கனிமொழி கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2023, 9:42 pm

பெண்களை தவறாக பேசக்கூடிய உரிமை யாருக்கும் கிடையாது : மன்சூர் அலிகான விவகாரத்தில் கனிமொழி கருத்து!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு வட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது

நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக துணை பொது செயலாளர் கனமொழி எம்பி நிகழ்சியில் பேசுகையில்

ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் போது எத்தனையோ தலைவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள் அவள் கையில் செல்போண் குடுக்கிறீங்க இல்ல அதுதான் இப்படி ஆச்சு பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புனீங்க படிக்க அனுப்பினீங்க இல்லா அதுதான் இப்படி ஆச்சு பெண்களுடைய உடை நீர் யார் முடிவு பண்ணுவது நான் பார்தா போடுவேன் முண்டா போடுவேன் அது என் இஷ்டம் நீ யார் முடிவு பண்ணுவது என பேசினார்

பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் மன்சூர் அலிகான் அவதூறு பேச்சு குறித்த கேள்விக்கு பெண்களை தவறாக இழிவாக பேசக்கூடிய உரிமை யாருக்கும் கிடையாது யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பேடியின் போது அமைச்சர் மனோ தங்கராஜ் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?