தமிழக அரசு சார்பாக தனக்கு முறையான சிகிச்சை வழங்கவில்லை என ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் குருசலாப்பட்டு பகுதியை சேர்ந்த காந்தி என்பவர் தமிழ்நாட்டில் இருந்து பங்களாதேஷிற்கு அசோக் லேலண்ட் லாரி சேஸ்களை எடுத்துச் செல்லும் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சம்பவம் நடைபெற்ற அன்று ஹௌராவிலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பும் பொழுது, ஒடிசா அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் காயம் அடைந்தார்.
இந்த நிலையில் அவரை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மூலமாக சிறப்பு ரயில் மூலமாக சென்னைக்கு அனுப்பப்பட்டு சென்னையில் எந்த விதமான மருத்துவ உதவிகளும் செய்யாமல் தன்னை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு, தற்போது சொந்த ஊர் திரும்பிய நிலையில், இதுவரை தமிழ்நாடு அரசு சார்பாக எந்த விதமான உதவியும் செய்யப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.