வடசென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்த போது, நடத்தை விதிமீறல் நடந்துள்ளதா..? அல்லது அதிகாரிகளின் கவன குறைவா..? என்பது குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்டத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்றத் தொகுதி வாரியாக உள்ள வைப்பு அறைக்கு அனுப்பிவைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- 4,469 பேலட் யூனிட் அந்தந்த தொகுதியின் ஸ்டோர் ரூமில் ஒவ்வொரு தொகுதியிலும் 16 இடங்களில் வைக்கப்பட உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை, 15 லட்சம் மதிப்புள்ள 12 ஐ போன்கள், 2 கோடியே 35 லட்சம், தங்கம் 8,046 கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, ஏற்பட்ட பிரச்சனை குறித்த கேள்விக்கு, “வேட்பு மனு தாக்கல் செய்யும் போது டோக்கன் அடிப்படையில் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறல் எதுவும் நடந்துள்ளதா..? அரசியல் கட்சிகளின் குழப்பமா..? அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனக் குறைவா…? என்று விசாரணை அறிக்கை கேட்டுள்ளோம். இதுவரை வட சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 9 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக சென்னையில் 52 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 10க்கு மேற்பட்ட வாக்கு சாவடிகள் இருந்தால் அவையும் பதற்றமான வாக்கு சாவடியாக எடுத்துக் கொள்ளப்படும், எனக் கூறினார்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.