திருப்பூர் – பெருமாநல்லூர் அடுத்துள்ள பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளைத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சம்பத் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக அதனது இரு சக்கர வாகனத்தில் பரமசிவம்பாளையம் வழியாக வந்த போது எதிர்பாராவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த வட இந்தியர் மீது மோதியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து அங்கிருந்த வட இந்தியர்கள் ஒன்று திரண்டு சம்பத்தை சிறை பிடித்து அவரிடமிருந்த பணத்தையும் பெற்று கொண்டு இரு சக்கர வாகன சாவியை தராமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பத் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு அவ்வழியாக வந்த இன்னொருவரின் வாகனத்தில் சென்று தனது மகளை அழைத்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.