திருப்பூர் – பெருமாநல்லூர் அடுத்துள்ள பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளைத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சம்பத் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக அதனது இரு சக்கர வாகனத்தில் பரமசிவம்பாளையம் வழியாக வந்த போது எதிர்பாராவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த வட இந்தியர் மீது மோதியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து அங்கிருந்த வட இந்தியர்கள் ஒன்று திரண்டு சம்பத்தை சிறை பிடித்து அவரிடமிருந்த பணத்தையும் பெற்று கொண்டு இரு சக்கர வாகன சாவியை தராமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பத் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு அவ்வழியாக வந்த இன்னொருவரின் வாகனத்தில் சென்று தனது மகளை அழைத்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.