கோவை: கோவையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் இங்கு பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இன்று ஊரடங்கு என்பதால் ரயில் நிலையம் வந்த தொழிலாளர்கள் ரயிலுக்காக தவிப்புடன் காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதோடு ஒமிக்ரான் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
எந்த நேரத்திலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என்ற நிலையில், பல்வேறு தொழில் நிறுவனத்தினரும் அச்சமடைந்துள்ளனர். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் இங்கு பணியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இந்த சூழலில் கோவையில் பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள சூழலில் கோவை ரயில் நிலையம் வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலுக்காக காத்திருக்கும் இந்த தொழிலாளர்கள், ரயில் வரும் வரை சாலையோரங்களில் அமர்ந்து உணவுக்காக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.