Categories: தமிழகம்

ரயிலில் கம்பளி போர்த்திய படி ஆண் சடலத்துடன் வந்த வடமாநில தொழிலாளர்கள் : திருப்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு!!

அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கோவைக்கு வாரம் ஒருமுறை சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சில்சாரில் இருந்து புறப்பட்ட ரெயில் நேற்று திருப்பூருக்கு வந்தது.

அப்போது எஸ் 3 பெட்டியிலிருந்து வடமாநிலத்தினர் 2 பேர் இறங்கினர். அவர்கள் முழுமையாக கம்பளி போர்த்தியபடி ஆண் சடலம் ஒன்றை எடுத்து வந்தனர். இதனை கண்காணிப்பு கேமராவில் பார்த்த ரயில்வே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்தவர் சில்சார் பகுதியை சேர்ந்த அர்பிந்த்ராய் (வயது 30) என்பதும் அவர் பெங்களூருவில் காவலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அர்பிந்த்ராய் சில்சாரிலிருந்து ஜோலார்பேட்டை வரை டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை வந்ததும் உடன் இருந்தவர்கள் அவரை எழுப்பியுள்ளனர். அப்போது அவர் இறந்த படி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து அவரிடம் இருந்த செல்போன் மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவரது உறவினர்கள் சடலத்தை திருப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கும்படியும், தாங்கள் வந்து எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி ரயிலில் வந்த 2 பேர் சடலத்தை எடுத்து வந்துள்ளனர்.

இதன் பின்னர் சடலத்தை மீட்டு ரயில்வே போலீசார் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெஞ்சுவலி காரணமாக அர்பிந்த் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயிலில் ஆண் சடலத்துடன் வடமாநில தொழிலாளர்கள் பயணித்தது உடன் வந்த பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

53 minutes ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

1 hour ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

3 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

3 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

3 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

4 hours ago

This website uses cookies.