திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள வாடிப்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பகலில் திடீரென நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை பார்த்த பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வத்தலகுண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பொழுது தீ விபத்தில் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற கூலித் தொழிலாளி உடலில் தீக்காயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வட மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் மில்லில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.