அண்ணா பற்றி பேச தகுதி இல்லை.. அண்ணாமலை போகிற யாத்திரை வசூல் யாத்திரை… கிழித்தெடுத்த சிவி சண்முகம்!!!
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் இன்று கோலியனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோலியனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜாகிர்உசேன், தலைமை கழக பேச்சாளர் நடிகை எமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். சி.வி.சண்முகம் எம்.பி. பேசியபோது
காங்கிரஸ், பா.ஜ.க. எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிட கட்சிகளால் விரட்டியடிக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆகின்றன. காங்கிரஸ் கட்சியாவது கேரளாவில் காலூன்றி விட்டது. ஆனால் தமிழகத்தில் கக்கன், காமராஜ் தவிர யாராலும் காலூன்ற முடியவில்லை. இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என போராட்டங்கள் செய்து எழுச்சி கண்டது
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். அண்ணாவை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும், தராதரமும் இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டு தரம் தாழ்ந்து பேசுகிற அண்ணாமலைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
அ.தி.மு.க. துணை இல்லாமல் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது. மோடி மீண்டும் பிரதமராகுவதற்கு அண்ணாமலைக்கு விருப்பம் இல்லைபோல. திட்டமிட்டே அண்ணாவை அண்ணாமலை இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார்.
அரசியலை பற்றி உனக்கு என்ன தெரியும்? தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. வெற்றி பெற கூடாதென தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அண்ணாமலை பேசுகிறார். அதனால்தான் தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டுவிட்டு அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார் அண்ணாமலை.
இந்து மதத்தை அழிக்க வேண்டுமென ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்துக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இந்துக்களை அழிக்க வேண்டுமென திமுக செயல்படுகிறது. பேரறிஞர் அண்ணா பேசாத ஒன்றை பேசியதாக கூறும் அண்ணாமலை, தி.மு.க.வின் கைக்கூலியாக மாறிக்கொண்டிருக்கிறார். உங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்/
அண்ணாமலை போகின்ற பாதயாத்திரை வசூல் யாத்திரை, நானும் ரவுடி, நானும் ரவுடி என்பதுபோல் நானும் மாநில தலைவர், நானும் மாநில தலைவர் என அண்ணாமலை செயல்படுகிறார். அவர் தன் இருப்பை காட்டிக்கொள்ள கூட்டணி தர்மத்தை மீறி பேசிக்கொண்டிருக்கிறார்.
எங்களை விமர்சனம் செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அ.தி.மு.க.விற்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் முக்கியம் அண்ணாமலை கூட்டணியை பிரிக்க வேண்டுமென்று கங்கனம் கட்டி பேசி கொண்டிருக்கிறார். அண்ணாமலையின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைமையிடம் வலியுறுத்துவோம் என அவர் பேசினார்
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.