Categories: தமிழகம்

போதைப் பொருள் கடத்தல் பேர்வழி சிக்கியது எப்படி? இங்க விட்டு அங்க புடிச்ச கதை..!

கேரளாவில் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லும் வழியில் தப்பித்த இலங்கையை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து வயதான மீனவரின் நாட்டு படகை திருடிக்கொண்டு இலங்கைக்கு தப்பித்து செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக கேரள கடற்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது இலங்கையில் இருந்து படகில் அதிக போதை ஏற்படுத்த கூடிய ஹெராயின் வகை போதை பொருட்களை கடத்தி வரப்பட்ட 7 பேர் கொண்ட கும்பலை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், முக்கிய குற்றவாளியான இலங்கை கொழும்புவை சேர்ந்த அஜித் கிஷன் என்பவரை மற்றொரு வழக்கில் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் கடந்த 24 ம் தேதி வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றபோது செல்லும் வழியில் அஜித் கிஷன் தப்பி ஓடி உள்ளார்.

இதனையடுத்து, போலீசார் அவருக்கு லுக் அவுட் நோட்டிஸ் வழங்கி மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் கடந்த 8 ம் தேதி கடல் மார்க்கமாக தேங்காய் பட்டணம் துறைமுகத்திற்கு வந்த அஜித் கிஷன் அங்கு மீனவர்கள் மீன் பிடித்துவிட்டு ஆற்றின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டு படகை திருடி அருகில் நிறுத்தியிருந்த மற்ற படகுகளில் இருந்து மண்ணெண்ணைய் கேன்கள் உள்ளிட்டவற்றை திருடி எடுத்துக்கொண்டு தப்பித்து இலங்கை சென்றுள்ளார்.

அங்கே எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் அஜித் கிஷனை கைது செய்துள்ளனர் இந்த நிலையில் குமரி மாவட்டம் சின்னத்துறையை சேர்ந்த முதியவர் கார்லோஸ் என்பவர் தனது படகை காணவில்லை என நித்திரவிளை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இலங்கையில் அஜித் கிஷன் படகுடன் கைது செய்யப்பட்ட தகவல் வந்தது குமரி மாவட்ட மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Poorni

Recent Posts

நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…

58 minutes ago

மாலை 6 மணி வரை கெடு..உள்ளே புகுந்து முடிச்சிடுவேன் : போராட்டத்தில் பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…

1 hour ago

திடீரென சட்டப்பேரவைக்குள் வந்த ரஜினி.. உறுப்பினர்கள் காரசார கணக்கு!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

2 hours ago

2026 பாஜக கனவு பலிக்குமா அண்ணாமலைக்கு செக்.. அதிமுக இரட்டை கணக்கு!

2026 தேர்தலுக்கு மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தால், அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து எடுக்க அதிமுக வலியுறுத்தி வருவதாக…

2 hours ago

குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆன கள்ளக்காதலன்.. விற்க நினைத்த காதலி திடுக்!

கோவையில், கள்ளக்காதலில் இருந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம்,…

2 hours ago

தற்கொலை செய்ய துணிந்த மனோஜ்.. காப்பாற்றிய மனைவி : 8 வருடமாக பட்ட கஷ்டம்!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

3 hours ago

This website uses cookies.