தமிழகம்

நோட்டீஸில் அவதூறு? தபெதிக – நாதகவினர் கடும் மோதல்.. ஈரோட்டில் பரபரப்பு!

ஈரோட்டில் வாக்கு சேகரிப்பின்போது, சீமான் குறித்து அவதூறாக நோட்டீஸ் வழங்கியதாக நாதக – தபெதிகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு, அதற்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், திமுக வேட்பாளர் வி.சந்திரகுமார் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக, இன்று காலை சம்பத் நகர், உழவர் சந்தை ஆகிய பகுதிகளுக்குச் சென்று, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

அதேபோல், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியும் வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், பன்னீர்செல்வம் பூங்காவில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில், சீமான் பற்றி அவதூறாக புகைப்படம் அச்சிட்டு விநியோகித்தாகக் கூறி, நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், இருதரப்பினரையும் போலீசார் சமாதனப்படுத்தினர். இதன் காரணமாக, அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: ஏகே 74 துப்பாக்கியால் சுட்டேன்.. அண்ணன் சொன்னாரு பாரு.. ஆக்ரோஷமாக பேசிய சீமான்!

மேலும், பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக – நாம் தமிழர் இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. இதில், திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

59 minutes ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

2 hours ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

3 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

3 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

4 hours ago

விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…

4 hours ago

This website uses cookies.