வேட்புமனு தாக்கலின் போது தமிழில் உள்ள உறுதிமொழியை படிக்க முடியாமல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திணறிய சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது உறுதிமொழி கூட சரியாக படிக்க தெரியாமல் திணறிய வேட்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் சொல்லிக் கொடுத்து உறுதிமொழி எடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
வேட்பாளர் உறுதிமொழி படிக்க கொடுத்த போது, அதை படிக்க முடியாமல் திணறினார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி எடுத்து படிக்கும் பொழுது, கூடவே நாம் தமிழர் கட்சியினர் படித்தார். அப்போது, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழுக்காக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழில் உறுதிமொழியை கூட படிக்க முடியாமல் வேட்பாளர் மனு தாக்கல் செய்தது மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும், நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழ் தெரியாது என்பது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியுமா..? என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.