நாதகவில் இருந்து செல்பவர்களை நாங்களே அனுப்பி வைக்கிறோம் எனக் கூறிய சீமான், அவர்கள் ஸ்லீப்பர்செல்களாக இருப்பர் என்றார்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (நவ.22) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் உடனான திடீர் சந்திப்பு, பல்வேறு அரசியல் கருத்துகளை முன்வைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சீமான், “நாங்கள் என்னப் பேசினோம் என்று இங்கே சொல்வது என்றால், உங்கள் முன்பாகவே அந்தச் சந்திப்பை நிகழ்த்திப் பேசிவிடலாமே. தனியாக எதற்கா பேச வேண்டும்? நானும் ரஜினிகாந்தும் சந்தித்ததன் மூலம் நாங்கள் இருவரும் சங்கி என்றால், அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரஜினியை அழைத்து அருகில் அமர வைத்துக்கொள்ளும் நீங்கள் (திமுக) என்ன?.
விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை என்றுமே அடைய முடியாது. அவதூறுகளைக் கடக்க விரும்பாதவன் வெற்றியைக் கடந்து செல்ல முடியாது. சங்கி என்றால் சகதோழன் அல்லது நண்பன் என்று தான் அர்த்தம். ரஜினிகாந்தைச் சந்தித்தது பற்றி நான் வெளிப்படையாகக் கூறுகிறேன்.
முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் கள்ள உறவு இல்லை, நல்ல உறவே இருக்கிறது. எங்களை சங்கி எனச் சொல்கிறார்கள். திமுகவை எதிர்த்தாலே சங்கியா?” என்று சீமான் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, நாதகவிலிருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகிச் செல்கிறார்களே என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: நெருக்கமாக இருந்த காதலர்கள்.. கதவைத் தட்டியதும் காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது?
அதற்கு பதில் கூறிய சீமான், “நாங்கள் தான் அவர்களை அனுப்பி வைக்கிறோம். நாங்கள் தான் மரியாதையாகப் போய், எல்லாரையும் அனுப்பி வைக்கிறோம். அவர்களை வெவ்வேறு இயக்கங்களில் போய் சேர்ந்து, எங்களுக்காக உளவு பார்க்க அனுப்பி வைக்கிறோம். எங்களுடைய ஸ்லீப்பர் செல்களாக அவர்களை நாங்கள் அனுப்பி வைக்கிறோம்” என்றார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.