பார்க்கத்தான் கம்பீரம்… பழகினால் அவர் ஒரு குழந்தை தான் ; விஜயகாந்த் குறித்து சீமான் பேச்சு!!
விஜயகாந்த் இடத்தை நடிப்பில் வேண்டும் என்றால் பூர்த்தி செய்யலாம் என்றும், ஆனால் அவரைபோல ஒரு சிறந்த மனிதர் ஒருவர் வருவது கடினம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சீமான், முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்றாலே உங்களுக்கு அச்சம் என்பதும் துணிவும்தான். தவசி படத்தில் அவருடன் பணியாற்றும் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.
விஜயகாந்த் இடத்தை நடிப்பில் வேண்டும் என்றால் பூர்த்தி செய்ய ஒருவர் வரலாம். ஆனால் அவரைபோல ஒரு சிறந்த மனிதர் ஒருவர் வருவது கடினம். திரை உலகின் உச்சத்துக்கு சென்றபோதும், அதனை தலையில் ஏறாமல் பார்த்துகொண்டவர். ரஜினி, கமல் போன்றோர்கள் விஜயகாந்த் சொன்னால் கேட்பார்கள்.
ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் இருக்கும் போதே, அரசியலுக்கு வந்து 10.5 விழுக்காடு வாக்குகள் வாங்கி எதிர்கட்சி அந்தஸ்த்து பெற்றது என்பது சாதாரண விசயம் அல்ல. விஜயகாந்த் பார்க்கத்தான் கம்பீரமா இருப்பாரு. ஆனால், பேசி பழகுவது மனது அளவில் அவர் ஒரு குழந்தைதான், என உருக்கமாக தெரிவித்தார்
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.