கோவை: கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்ததை கண்டித்து 80க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் கொரோனா பிரிவுக்கு செவிலியர்கள் பணியமர்த்தப்படனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்ட கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் 98 செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர்.
அவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.14 ஆயிரமும், ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்தந்த மாதத்தில் ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை.
ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் வேலை காலம் இன்றோடு முடிவடைகிறது. இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் 80க்கும் மேற்பட்டோர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செவிலியர்கள் கூறியதாவது: கொரோனா காலத்தில் யாருமே பணிக்கு வராத நிலையில் நாங்கள் எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிக்கு சென்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தோம்.
தற்போது ஒப்பந்த காலம் முடிந்ததால் எங்களை பணியை விட்டு செல்லுமாறு கூறுகின்றன்ர். கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செவியலியர்களுக்கு 3 மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
எனவே கொரோன காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
This website uses cookies.