விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வி என்பவரின் மகள் தரணி (வயது 19) என்பவர் இன்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
கொலை செய்யப்பட்ட நபர் சென்னையில் தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் இளம்பெண் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல்துறை விசாரணை செய்ததில் காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் விரைந்து சென்று கொலையாளியான பக்கத்து ஊரான மதுரபக்கத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 25) என்பது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து போலிசார் அவனை தேடி சென்றப்போது புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியில் பகுதியில் பதுங்கி இருந்த கணேசனை விக்கிரவாண்டி போலிசார் கைது செய்தனர். மேலும் அவனிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல் நிலையம் அழைத்து வந்து வந்து விக்கிரவாண்டி காவல்துறையினர் விசாரணை செய்ததில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் பின்னர் ஒரு வருடமாக தரணி, இவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் தரணி மீது ஆத்திரமடைந்த கணேசன் எப்பொழுது இவர் வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்து கொலை செய்ய திட்டமிட்டு, இன்று காலை வீட்டின் அருகே பதுங்கி இருந்த கணேசன், கல்லூரி மாணவி தரணி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டி கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலும் ஆரம்பத்தில் இருவரும் காதலித்து வந்த நிலையில் கணேசன் கஞ்சா மதுவிற்கு அடிமையாகி பாதை மாறி போனதால் ஆரம்பத்தில் காதலித்து வந்த தரணி கடந்த ஓர் ஆண்டாக அவரிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார்.
இதன் காரணமாகவே இளம்ப்பெண்ணை கொலை செய்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கல்லூரி மாணவி தரணியின் தாயார் செல்வி விழுப்புரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை தான் மகளை எழுப்பி விட்டு விட்டு விழுப்புரத்திற்கு வேலைக்கு வந்துள்ளார்.
அதன் பின்னர் தான் மகள் கொலை செய்யப்பட்டது தகவல் தெரிந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.