Categories: தமிழகம்

கள்ளக்காதலனுடன் திருமணம் செய்ய இடையூறு : கணவனை கொலை செய்ய மனைவி போட்ட ‘பலே’ திட்டம்… கம்பி எண்ணும் கொலைகார கும்பல்!!

திருப்பூர் : கள்ளகாதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து 13 இடங்களில் குத்தி கணவனை கொன்ற மனைவியை போலீசசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 37). கொடைக்கானலை சேர்ந்த இவர் தனது மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் தண்ணீர் பந்தலில் வசித்து வருகிறார்.

சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த 4 ஆம் தேதி பணி முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியில் வந்த கோபால் தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

ஒரு கடை அருகே நின்று பேசி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் சரமாரியமாக குத்தினர். கழுத்து,வயிறு,மார்பு உள்ளிட்ட இடங்களில் 13 முறை குத்தியதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கத்தியால் குத்திய நபர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இந்த கொலையை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் சஷாங் சாய் தலைமையில் அங்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடியது. கொலைக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபரான கோபாலின் மனைவி சுசீலா என்பவரும் மாரீஸ் என்பவரும் ஒரு பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கடந்த 3 வருடங்களாக இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மாரீஸை திருமணம் செய்து கொள்ள சுசீலா கூறியுள்ளார். மேலும் இடையூறாக உள்ள கணவர் கோபாலை கொலை செய்யலாம் என தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர்.

கூலிப்படையை வைத்து கொலை செய்யலாம் என திட்டமிட்டு திருச்சியில் இருந்து கூலிப்படையை வரவழைத்துள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி கோபால் வேலையை முடித்து வீடு திரும்பும் போது மாரீஸ் ஏற்பாடு செய்த கூலிப்படையினர் கோபாலை 13 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தது காவல்துறையினரின் விசாரனையில் தெரியவந்தது.

இதனை அடுத்து கோபால் மனைவி சுசீலாவின் கள்ளக்காதலன் மாரீஸ், கூலிப்படையை சேர்ந்த விஜய், மணிகண்டன், உலகேஸ்வரன், மதன்குமார், வினோத் ஆகியோரை காவல்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த கோபாலின் மனைவி சுசீலாவை தேடி வந்த நிலையில் இன்று பல்லடம் வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

2 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

3 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

5 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

6 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

7 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

8 hours ago

This website uses cookies.