தமிழகம்

ப்ரோமோஷனும் வேணும், பொண்ணும் வேனும்.. புதரில் கிடந்த சிறுவன்.. திருப்பூரை அலறவிட்ட சம்பவம்!

திருப்பூர் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்க்கும் நபர், தான் பழகிய பெண்ணின் மகனைக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை எனப்படும் ஸ்பின்னிங் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் ஒடிசாவைச் சேர்ந்த கரண் தாஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அதை நூற்பாலையில் அனிதா நாயக் என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில், ஆறு வயதில் மகன் ஒருவரும் உள்ளார். எனவே, தனது மகனுடன் அருகில் உள்ள குடியிருப்பில் அனிதா நாயக் வசித்து வந்துள்ளார். இதனிடையே கரண் தாஸுக்கும், அனிதா நாயக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நன்றாக சென்று கொண்டிருக்கையில், திடீரென சுரேஷ் என்ற ஒரு நபர் உள்ளே வந்துள்ளார். அவரும் அந்த நூற்பாலையில் வேலை செய்பவரே. இந்த நிலையில், சுரேஷுக்கும், அனிதா நாயகத்திற்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனை அறிந்த கரண் தாஸ், பலமுறை இதனை கைவிடுமாறு அனிதாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அனிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த கரண் தாஸ், மது போதையில் நூற்பாலைக்கும் வந்துள்ளார். எனவே அவரை தற்காலிகமாக மில்லில் இருந்து நீக்கியுள்ளனர். அதேநேரம், சுரேஷுக்கு மேலாளர் பதவியும் கொடுத்துள்ளனர். ஆனால் மேற்பார்வையாளராக இருந்து வரும் கரண் தாஸ் தான் அடுத்ததாக அந்த நூற்பாலையில் மேலாளராக வர வேண்டியவர்.

எனவே, தனது மேலாளர் பதவியும் பறிகொடுத்த கரண் தாஸ், எப்படியாவது அந்த மேலாளர் பதவியையும், அனிதாவையும் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம் தீட்டி உள்ளார். இதற்காக அனிதாவின் 6 வயது மகனைக் கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்.

இதன்படி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் சென்ற கரண் தாஸ், அச்சிறுவனை அழைத்து அருகில் உள்ள புதருக்குள் வந்துள்ளார். அங்கு சிறுவனின் கழுத்தை துண்டால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அதே இடத்தில் சிறுவனை மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதையும் படிங்க: திமுக பிரமுகரை சுத்துப்போட்ட பெற்றோர்.. மதுரையில் மாடியில் இருந்து தவறிய மாணவன்!

இதனை அடுத்து, தனது மகன் காணாமல் போனதை அறிந்த அவரது தாய் அனிதா, ஒரு நாளாக அங்குமிங்கும் தேடியுள்ளார். ஆனால் மகன் கிடைக்காததால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தான் புதருக்குள் ஒரு சிறுவனின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அச்சிறுவன் அனிதா நாயக்கின் மகன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் தான், கரண் தாஸின் இந்தக் கொலை திட்டம் தெரியவந்துள்ளது. பின்னர் தலைமறைவாக இருந்த கரண் தாஸை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

13 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

14 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

15 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

15 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

16 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

16 hours ago

This website uses cookies.