தமிழகம்

ப்ரோமோஷனும் வேணும், பொண்ணும் வேனும்.. புதரில் கிடந்த சிறுவன்.. திருப்பூரை அலறவிட்ட சம்பவம்!

திருப்பூர் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்க்கும் நபர், தான் பழகிய பெண்ணின் மகனைக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை எனப்படும் ஸ்பின்னிங் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் ஒடிசாவைச் சேர்ந்த கரண் தாஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அதை நூற்பாலையில் அனிதா நாயக் என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில், ஆறு வயதில் மகன் ஒருவரும் உள்ளார். எனவே, தனது மகனுடன் அருகில் உள்ள குடியிருப்பில் அனிதா நாயக் வசித்து வந்துள்ளார். இதனிடையே கரண் தாஸுக்கும், அனிதா நாயக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நன்றாக சென்று கொண்டிருக்கையில், திடீரென சுரேஷ் என்ற ஒரு நபர் உள்ளே வந்துள்ளார். அவரும் அந்த நூற்பாலையில் வேலை செய்பவரே. இந்த நிலையில், சுரேஷுக்கும், அனிதா நாயகத்திற்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனை அறிந்த கரண் தாஸ், பலமுறை இதனை கைவிடுமாறு அனிதாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அனிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த கரண் தாஸ், மது போதையில் நூற்பாலைக்கும் வந்துள்ளார். எனவே அவரை தற்காலிகமாக மில்லில் இருந்து நீக்கியுள்ளனர். அதேநேரம், சுரேஷுக்கு மேலாளர் பதவியும் கொடுத்துள்ளனர். ஆனால் மேற்பார்வையாளராக இருந்து வரும் கரண் தாஸ் தான் அடுத்ததாக அந்த நூற்பாலையில் மேலாளராக வர வேண்டியவர்.

எனவே, தனது மேலாளர் பதவியும் பறிகொடுத்த கரண் தாஸ், எப்படியாவது அந்த மேலாளர் பதவியையும், அனிதாவையும் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம் தீட்டி உள்ளார். இதற்காக அனிதாவின் 6 வயது மகனைக் கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்.

இதன்படி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் சென்ற கரண் தாஸ், அச்சிறுவனை அழைத்து அருகில் உள்ள புதருக்குள் வந்துள்ளார். அங்கு சிறுவனின் கழுத்தை துண்டால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அதே இடத்தில் சிறுவனை மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதையும் படிங்க: திமுக பிரமுகரை சுத்துப்போட்ட பெற்றோர்.. மதுரையில் மாடியில் இருந்து தவறிய மாணவன்!

இதனை அடுத்து, தனது மகன் காணாமல் போனதை அறிந்த அவரது தாய் அனிதா, ஒரு நாளாக அங்குமிங்கும் தேடியுள்ளார். ஆனால் மகன் கிடைக்காததால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தான் புதருக்குள் ஒரு சிறுவனின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அச்சிறுவன் அனிதா நாயக்கின் மகன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் தான், கரண் தாஸின் இந்தக் கொலை திட்டம் தெரியவந்துள்ளது. பின்னர் தலைமறைவாக இருந்த கரண் தாஸை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

8 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

8 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

10 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

10 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

10 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

10 hours ago

This website uses cookies.