தந்தைக்கு இல்லாததால் தனக்கும் சாதி சான்றிதழ் தர மறுப்பதாகவும், கல்லூரியில் சாதி சான்றிதழ் கேட்டு வற்புறுத்ததாகவும் நெல்லையில் மாணவி கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
நெல்லை மாவட்டத்தில் வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், ரெட்டியார்பட்டி போன்ற இடங்களில் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டுமென அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இருப்பினும், பலருக்கு தற்போது வரை சாதி சான்றிதழ் கொடுக்காததால் மேற்கண்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் படிப்பை தொடர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் நெல்லை ரெட்டியார்பட்டியில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த இசக்கி என்பவரின் மகள் காளீஸ்வரி தனக்கு சாதி சான்றிதழ் கேட்டு கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
காளீஸ்வரி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பிஏ பட்டப்படிப்பு படித்து வரும் நிலையில், சாதி சான்றிதழ் கேட்டு கல்லூரி நிர்வாகத்தினர் தொடர்ந்து மாணவியை கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே, தனக்கு உடனடியாக அரசு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டார்.
இது குறித்து மாணவி காளீஸ்வரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- கல்லூரியில் சாதி சான்றிதழ் கொண்டு வரும்படி கேட்கின்றனர். எனக்கு கட்டாயம் சாதி சான்றிதழ் வேண்டும். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே சாதி சான்றிதழ் கேட்டு அரசிடம் மனு அளித்து வருகிறேன். தற்போது வரை சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.
எனது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கிறார். எனவே சாதி சான்றிதழ் இருந்தால் தான் என்னால் தொடர்ந்து படிக்க முடியும். தந்தைக்கு சாதி சான்றிதழ் இல்லை என்பதால், எனக்கும் தர மறுக்கின்றனர். எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
சாதியை ஒழிக்க வேண்டும் என காலங்காலமாக பேசி வந்தாலும் கூட, நடைமுறையில் அது சாத்தியமாகாது என்பதே மறக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் கல்லூரி மாணவி தனது படிப்பை தொடர முடியவில்லை. உதவித்தொகையும் பெற முடியாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் ஆட்சியிடம் மனு அளித்துள்ள சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.