இஸ்லாமிய அமைப்பு தலைவர் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை : 3 மணி நேரத்திற்கு மேல் சோதனையால் மதுரையில் பரபரப்பு!
மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியில் உள்ள சாமியார் சந்து பகுதியில் வசித்துவரும் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரான அலிஜிகாத் (எ) முகம்மது அப்துல் அஜிம் என்பவரது வீட்டிற்கு NIA அதிகாரிகள் இன்று அதிகாலை 6 மணிக்கு விசாரணை நடத்துவதற்காக வருகை தந்தனர்.
NIA அதிகாரிகள் வருகை தந்த நிலையில் அவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் காலை 7.30 மணிக்கு மேல் ஹாஜிமார்தெரு சாவடி எதிரேயுள்ள சந்தில் உள்ள ஜிகாத் அலி சகோதரரின் வீட்டில் இருந்த நிலையில் NIA அதிகாரிகள் சோதனையை தொடங்கிய நிலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக அலி ஜிகாத்டம் விசாரணை செய்துவருகின்றனர்.
இவரிடம் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
NIA அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் திடீர்நகர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
NIA அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் அலிஜிகாத் (எ) முகம்மது அப்துல் அஜிம் என்பவரது மீது விளக்குத்தூண் காவல்நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபர் மசூதி தொடர்பாக சுவரொட்டி ஒட்டியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.