காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே 72 வயது முதியவரை கொக்கு மருந்து வைத்து கொலை செய்துவிட்டு மர்ம நபர் தப்பியோடிய சம்பவம் குறித்து தாலுக்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த நீர் வல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் வயது 72 . நேற்று 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்துவிட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பியுள்ளார்.
இரவு தூங்கிக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர் ஒருவர் இவர் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணம் 15 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்து கொண்டு மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார். இதனிடையே, உறவினர்கள், பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த முதியவர் கோவிந்தனை பார்த்த பொழுது அவருக்கு எந்தவித காயங்களும் இல்லாமல் மர்மமான முறையில் இறந்த கிடந்தது அதிர்ச்சி அளித்தது.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பெயரில் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசி டிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
72 வயது முதியவரை நவீன முறையில் யாருக்கும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில்கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.