காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே 72 வயது முதியவரை கொக்கு மருந்து வைத்து கொலை செய்துவிட்டு மர்ம நபர் தப்பியோடிய சம்பவம் குறித்து தாலுக்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த நீர் வல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் வயது 72 . நேற்று 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்துவிட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பியுள்ளார்.
இரவு தூங்கிக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர் ஒருவர் இவர் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணம் 15 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்து கொண்டு மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார். இதனிடையே, உறவினர்கள், பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த முதியவர் கோவிந்தனை பார்த்த பொழுது அவருக்கு எந்தவித காயங்களும் இல்லாமல் மர்மமான முறையில் இறந்த கிடந்தது அதிர்ச்சி அளித்தது.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பெயரில் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசி டிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
72 வயது முதியவரை நவீன முறையில் யாருக்கும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில்கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.