ராணிப்பேட்டை : நீண்ட நாட்களாக அலைக்கழிக்கப்பட்ட முதியவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாலாஜாப்பேட்டை அடுத்த செங்காடு மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைய உள்ள நிலையில், தனது 16 செண்ட் நிலத்தை அளவீடு செய்து தருமாறு கூறி கிராம நிர்வாக அலுவலர் பழனியிடம் மனு அளித்துள்ளார்.
ஆனால் பலமுறை பணம் கட்டியும் இடத்தை அளக்க வராமல் கிராம நிர்வாக அலுவலர் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமடைந்த முருகேசன் இன்று VAO அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை மீட்ட ஊழியர்கள் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
This website uses cookies.