கவனம் தவறினால் மரணம்.. அதிவேகத்தில் வந்த பைக் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை யை சேர்ந்த வழக்கறிஞர் மனோகரன் (வயது 60) நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் சென்றார் .
பின்னர் அங்கிருந்து இரவு நிலக்கோட்டைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது சின்னாளபட்டி அடுத்து திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் பெருமாள்கோவில்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது.
மிதி வண்டியில் சாலையை கடக்க முயன்ற பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த சின்னகாளை-62 இணைப்பு சாலையை முயன்று சாலையின் நடுவே சென்றபோது, கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் மனோகரன் மிதிவண்டி மீது மோதாமல் இருப்பதற்காக இரு சக்கர வாகனத்தை கட்டுப்படுத்திய போது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மிதிவண்டியில் சென்ற கொண்டிருந்த முதியவர் மீது மோதி சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசியது.
விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞரும் இருசக்கர வாகனத்தோடு சாலையில் கவிழ்ந்து தரதரத என இழுத்துச் செல்லப்பட்டார்.
சம்பவம் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல் துறையினர் பார்த்தபோது சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் மனோகரன் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மிதிவண்டியில் வந்த முதியவர் சின்னக்காளை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து அம்பாத்துறை காவல் ஆய்வாளர் மீனாட்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்ததிலையில். விபத்தில் இறந்த மனோகரன் திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவராக இருந்தவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னக்காளை சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிரிழந்தார். தற்போது விபத்து நடைபெற்ற இடத்தில் பதிவு செய்யப்பட்ட , மிதி வண்டியும் இருசக்கர வாகனமும் மோதிக்கொள்ளும் பாதைப்பதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திவருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.