வாணியம்பாடியில் ஆட்டு தொட்டியில் பழைய ஆட்டுகறி விற்றதாக கூறி ஆட்டோ டிரைவர் வியாபாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாமேடு பகுதியில் இயங்கி வரும் ஆட்டு தொட்டியில் தினம் தினம் புதியதாக ஆடு வெட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது வழக்கம். இதனால், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சென்று ஆட்டுகறி வாங்கி வருகின்றனர்.
நேற்று அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலசந்தர் என்பவர் ஆட்டு தொட்டியில் ஆட்டுக்கால் மற்றும் ஆட்டுத் தலை வாங்கி வந்ததாகவும், அதனை வீட்டில் சமைக்கும் போது பழைய கறி என தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனை ஆட்டோ ஓட்டுநர் ஆட்டு தொட்டிக்கு கறியுடன் சென்று கேட்டுள்ளார். அப்போது, கறி வியாபாரி தவறி வரும் அதை கேட்காதே எனவும், அப்படி தான் பழைய கறி விற்போம் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று வாடிக்கையாளரை திட்டியுள்ளார்.
அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது போன்று பழைய கறியை வியாபாரம் செய்யும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.