தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களின் வரிசையில் இருப்பவர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய். மாஸ் காட்டும் நடிப்பு மற்றும் ரசிக்க வைக்கும் நடனங்களால், எப்போதும் தனது படங்களை பாக்ஸ் ஆபிஸிலியே வைத்திருப்பது அவரது சிறப்பாகும்.
மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து தற்போது, நெல்சன் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அரபிக் குத்து மற்றும் ஜாலியான ஜிம்கானா ஆகிய இரு பாடல்கள் வெளியாகி பெரிய ஹிட் அடித்துள்ளது.
இந்தப் பாடலில் நடிகர் விஜய் போட்டுள்ள வித்தியாசமான ஸ்டெப்பை திரையுலக பிரபலங்களும் போட்டு, வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், பீஸ்ட் படம், தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக, வருகிற ஏப்ரல் 13ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுவதாக அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால், விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய்க்காக,மூதாட்டி ஒருவர் எழுதியிருக்கும் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த அந்த மூதாட்டி, தனக்கு உதவி செய்யும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் வீட்டு முகவரி தெரியாததால், அந்தக் கடிதத்தை தனது பேரனிடம் கொடுத்துள்ளார்.
அவரோ, பாட்டியின் புகைப்படத்தையும், அந்தக் கடிதத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுவரையில் நடிகர் விஜய்க்கு இந்தத் தகவல் தெரியாத நிலையில், கண்டிப்பாக இந்தக் கடிதம் அவர் கண்களுக்குப் படும் என்று விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர். விரைவில், அந்த மூதாட்டிக்கு நடிகர் விஜய் ஆதரவுக்கரம் நீட்டுவார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் ‘தளபதி 66’ படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இது ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.