கோவை பொள்ளாச்சியில் பத்தாவது முறையாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. நேற்று காலை துவங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இந் நிலையில் இன்று காலை நிகழ்ச்சி நடைபெறும் இடமான ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து ஆறாம் எண் கொண்ட யானை வடிவிலான பிரம்மாண்ட ராட்சத பலூனில் பைலட் என அழைக்கப்படும் ராட்சத பலூன் இயக்கிகளான வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பைலட்டுகளுடன் இரண்டு பெண் குழந்தைகள் பயணம் செய்தனர்.
பொள்ளாச்சியில் ராட்சத பலூனில் பயணம் செய்த சிறுமிகள் எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்து இருக்கவில்லை.
இதையும் படியுங்க: இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட ராட்சத பலூன் கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டில் என்ற பகுதியில் தரை இறங்கியதாக தெரிகிறது.
நெல் வயல்வெளியில் திடீரென ராட்சத பலூன் தரையிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உள்ளூர் மக்கள் உதவியுடன் வயல்வெளியில் தரையிறங்கிய ராட்சத பலூன் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இதில் சிறுமிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். இரண்டு சிறுமிகளுடன் சென்ற ராட்சத பலூன் கேரள மாநிலப் பகுதியில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொள்ளாச்சியில் காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கேள்வி எழுப்பிய போது அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பைலட்டுகளின் விதிமுறைகளுக்கு ஏற்றபடி முறையாக செய்யப்பட்டு இருந்ததாக தெரிவித்தார்.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.