கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக வேனில் கன்னியாகுமரி சென்றபோது நெல்லை அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி வாசுதேவநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்கள் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக மினி வேனில் நெல்லை வழியாக கன்னியாகுமரி சென்றுள்ளனர். வண்டியில் டிரைவர் உள்பட ஆண்கள் 12 பேர், பெண்கள் இரண்டு பேர் என மொத்தம் 15 பேர் பயணித்துள்ளனர்.
வேன் நெல்லை பாளையங்கோட்டையில் அருகில் உள்ள டக்கரம்மாள் புரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென மினி வேனில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதை உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் கணேசன், அந்த பேருந்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அனைவரையும் கீழே இறக்கி விட்டுள்ளார்.
அடுத்த சில நொடிகளில் மின் வேன் முழுவதும் மளமளவென தீப்பிடிக்க தொடங்கியது. உடனடியாக ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீ விபத்தால் வேன் முழுவதும் தீக்கிரையானது. அதிர்ஷ்டவசமாக வேனில் பயணித்த 15 பேரும் உயிர் பிழைத்தனர். கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க சென்றபோது மினிவேன் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.