சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் கல்லடா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான குளிர்சாதன வசதி கொண்ட ஆம்னி பேருந்து இன்று காலை சுமார் 6 மணி அளவில் கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த கோவை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்துள்ளனர்.அப்போது அந்த பேருந்து அருணாச்சல் பிரதேசம் மாநில பதிவெண் கொண்டிருந்ததையடுத்து அப்பேருந்தினை சிறை பிடித்த அதிகாரிகள் சுமார் 30 பயணிகளுடன் பேருந்தை கோவை காந்திபுரத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் சுமார் 2 மணி நேரம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைத்த வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் பேருந்தை இயக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
இதை அடுத்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கேரள மாநில அரசு பேருந்தை பிடித்தி அதில் ஏற்றிவிட்ட அதிகாரிகள் ஆம்னி பேருந்தை கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் ஆம்னி பேருந்து அனுமதி மீறல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அபராத தொகையை வசூலித்த பின்னரே பேருந்தை விடுவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக இப்பிரச்சினை சென்று கொண்டுள்ள சூழலில் கல்லடா பேருந்து நிறுவன உரிமையாளர் தான் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்து அதன் அடிப்படையிலேயே வெளி மாநில பேருந்துகள் தமிழகத்திற்குள் இயக்குவதற்கு தடை விதிக்க கூடாது என்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை அமலில் இருக்கும் சூழலில் கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
This website uses cookies.