கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயதுமிக்க பெண் ஒருவர், பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அவர் உள்நோயாளியாக இருக்கிறார். இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் சிகிச்சையில் இருந்த அந்தப் பெண் நோயாளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் நடத்தில் விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவரின் பெயர் சதீஷ் என்பதும், அவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.
இதையும் படிங்க: தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!
பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய மு.க.ஸ்டாலின், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? யார் அந்த SIR என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் ஸ்டாலின் அவர்களே, உங்கள் ஆட்சியில் இதுபோன்ற “சார்”கள் காப்பாற்றப்படுவதால் தான், மேலும் பல “சார்”கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.