சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.. ஆனால் 3 மணி நேரம்.. வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல்!
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
பின்னர், நீதிமன்ற காவலில் இருக்கும் சவுக்கு சங்கரை வழக்கு விசாரணைக்காக 5 நாட்கள் விசாரிக்க வேண்டும் என கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் கோவை சைபைர் கிரைம் போலீசார் கோரிக்கை வைத்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணை முடிந்து மீண்டும், நாளை மாலை சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, சவுக்கு சங்கர் சைபர் கிரைம் காவல்துறையினரின் காவல் மனுவிற்கு ஒத்துழைப்பு தந்தோம். நாளை மாலை 5 மணி வரை விசாரணையின் வரை ஒவ்வொரு 3 மணி நேரமும் 15 நிமிடம் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
காவல் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட அறையில் இருந்து மாற்றப்பட வேண்டும் என்பதை சிறைத்துறையில் நடப்பதை அப்போது சொல்வோம்.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் வழக்குல காட்டுற வேகம் ஜெயக்குமார் மரண வழக்குல காமிக்கலாமே? தமிழக பாஜக வாய்ஸ்!
குண்டர் சட்டத்திற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம் அதற்கு கால அவகாசம் உள்ளது என இவ்வாறு சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.