Categories: தமிழகம்

சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.. ஆனால் 3 மணி நேரம்.. வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல்!

சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.. ஆனால் 3 மணி நேரம்.. வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல்!

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

பின்னர், நீதிமன்ற காவலில் இருக்கும் சவுக்கு சங்கரை வழக்கு விசாரணைக்காக 5 நாட்கள் விசாரிக்க வேண்டும் என கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் கோவை சைபைர் கிரைம் போலீசார் கோரிக்கை வைத்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விசாரணை முடிந்து மீண்டும், நாளை மாலை சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, சவுக்கு சங்கர் சைபர் கிரைம் காவல்துறையினரின் காவல் மனுவிற்கு ஒத்துழைப்பு தந்தோம். நாளை மாலை 5 மணி வரை விசாரணையின் வரை ஒவ்வொரு 3 மணி நேரமும் 15 நிமிடம் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

காவல் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட அறையில் இருந்து மாற்றப்பட வேண்டும் என்பதை சிறைத்துறையில் நடப்பதை அப்போது சொல்வோம்.

மேலும் படிக்க: சவுக்கு சங்கர் வழக்குல காட்டுற வேகம் ஜெயக்குமார் மரண வழக்குல காமிக்கலாமே? தமிழக பாஜக வாய்ஸ்!

குண்டர் சட்டத்திற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம் அதற்கு கால அவகாசம் உள்ளது என இவ்வாறு சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

10 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

12 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

13 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

13 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

14 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

15 hours ago

This website uses cookies.