Categories: தமிழகம்

ஒரு வயது குழந்தை கார் ஏற்றி கொடூரமாக கொலை.. திமுக பிரமுகர் வெறிச்செயல்.. அதிர வைக்கும் பின்னணி!!

திண்டுக்கல் : ரெட்டியார் சத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக ஒரு வயது குழந்தை மீது காரை ஏற்றி கொலை செய்த திமுக கிளைச் செயலாளர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள சில்வார்பட்டி தெற்கு தெருவில் வசித்து வருபவர் முத்துசாமி மகன் பொன்னுச்சாமி (34). அவரது மனைவி சுமதி, இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து மகள் சாதனா (1) பிறந்துள்ளார். பொன்னுச்சாமி சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

பொன்னுசாமியின் பக்கத்து வீட்டுக்காரர் ராஜேந்திரன் (50). இவர் திமுக கிளைச் செயலாளராக உள்ளார். பொன்னுச்சாமிக்கும் இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் எழுந்துள்ளது. இதன் காரணமாக பொன்னுச்சாமிக்கு ராஜேந்திரன் பல முறை கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மதியம் 2:30 மணி அளவில் பொன்னுச்சாமி தனது இருசக்கர வாகனத்தில் தனது மகள் சாதனா மற்றும் அவரது அம்மா முத்து பிள்ளையுடன் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று உள்ளார். பேருந்து நிறுத்தத்தில் அவரது அம்மா முத்து பிள்ளையை இறக்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக அழகுபட்டி – திண்டுக்கல் சாலையில் பட்டத்து நாயக்கன்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, ராஜேந்திரன் காரில் எதிரே வந்துள்ளார்.

ராஜேந்திரனின் கார் வருவதை பார்த்த பொன்னுச்சாமி தனது வாகனத்தில் சாலையின் ஓரத்தில் நின்றுள்ளார். அப்பொழுது ராஜேந்திரன் தனது காரை தாறுமாறாக ஓட்டி சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த பொன்னுச்சாமி மற்றும் அவரது ஒரு வயது குழந்தையான மகள் சாதனா மீது மோதியுள்ளார்.

அப்பொழுது வாகனம் மோதிய விபத்தில் பொன்னுச்சாமியும், குழந்தை சாதனாவும் ராஜேந்திரன் ஒட்டி வந்த காரின் அடியில் சிக்கிக் கொண்டனர். கார் சிறிது தூரம் சென்று ஒரு கல்லில் மோதி நின்றவுடன் அருகில் இருந்த மக்கள் ஓடி வருவதை பார்த்து ராஜேந்திரன் வாகனத்தை விட்டு விட்டு ஓடி தலைமறைவாகி விட்டார்.

அருகில் இருந்தவர்கள் வாகனத்தின் அடியில் சிக்கி இருந்த பொன்னுச்சாமியையும், குழந்தை சாதனாவையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் இந்த விபத்தில் குழந்தை சாதனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தது தெரிய வந்தது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ரெட்டியார் சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணன் இந்த சம்பவம் கொலையா ? அல்லது விபத்தா ? என்கிற கோணத்தில் வழக்கு பதிவு செய்து தலை மறைவான ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.

பக்கத்து வீட்டுக்காரர் மீது கொண்ட முன்விரோதம் காரணமாக ஒரு வயது குழந்தை மீது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு, அதை விபத்து வழக்காக மாற்ற முயற்சி செய்துள்ளதாகவும், ராஜேந்திரன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாதனாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பிரபுதேவாவின் நடனத்தை பார்த்து கைத்தட்டிய ஆடியன்ஸ்! கடுப்பான சிரஞ்சீவி?

நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…

10 minutes ago

விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…

தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…

1 hour ago

பெண்களை ரொம்ப கேவலமாக பேசக்கூடியவர்கள் அந்த ரெண்டு தலைவர்கள்தான் : ஜோதிமணி விமர்சனம்!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…

2 hours ago

திமுகவில் பதவி வகிக்க தகுதியில்லாத பொன்முடிக்கு அமைச்சர் பதவி எதுக்கு? வானதி சீனிவாசன் கொந்தளிப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…

3 hours ago

பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…

4 hours ago

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

4 hours ago

This website uses cookies.