கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் மற்றும் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செல்போன் கடைகள், டீ கடைகள் பேக்கரி கடைகள் உணவகங்கள் உள்ளன. செல்போன் கடை வாசலில் கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த கடையில் வயதான முதியவர் ஒருவர் திருடும் போது சிசிடிவி கேமரா ஆதாரம் மூலமாக போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று பேருந்து பயணி போல் ஒருவர் நின்று கொண்டு கைக்கடிகாரத்தை திருடும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இது குறித்து கடை உரிமையாளர் மலைக்கொழுந்து கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர் தொடரும் திருட்டு சம்பவத்தால் கோவை டவுன் பேருந்து நிலைய பயணிகள் மற்றும் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.