சென்னை வெங்காய வியாபாரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(30), இவர் வெளிமாநிலங்களில் இருந்து பூண்டு, வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து தமிழகம் முழுவதும் வியாபாரிகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். கரூர் ஐந்தாவது குறுக்கு வீதியை சேர்ந்த நந்தகுமார், அவரது மனைவி ஸ்ரீதேவி சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாராக்கல்லூரியில் காய்கறி கடை வைத்துள்ளார்.
அந்தக் கடைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை விக்னேஷ் 30 லட்சம் ரூபாய்க்கு வெங்காயம், பூண்டு வினியோகம் செய்துள்ளார். அந்த பணத்திற்கு தம்பதியர் மூன்று காசோலைகளை வழங்கினர். அதில் பணம் இல்லை என வங்கியில் இருந்து திரும்பியது. இதுகுறித்து விக்னேஷ் பலமுறை கேட்ட நிலையில் தம்பதிகள் பணத்தை தர மறுத்துள்ளனர்.
இதுகுறித்து விக்னேஷ் சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த நிலையில் தம்பதியர்கள் இருவரும் தலைமறைவாகினர்.
இந்த நிலையில் கரூரில் இருந்த நந்தகுமார், ஸ்ரீதேவியை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.