அன்றாடம் கூலிகள் ஆன்லைன் லோன் வாங்காதீர்கள் என்று அதிக வட்டியால் பாதிக்கப்பட்ட டெம்போ ஓட்டுநர் ஒருவர் வெளியிட்ட பாடல் வைரலாகி வருகிறது.
ஆன் லைன் ஆப்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லோன் கொடுத்து வாடிக்கையாளர்களை மிரட்டி அதிக பணம் வசூலித்து பல மோசடிகள் அரங்கேறி பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பல மோசடி நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆன் லைன் ஆப் மூலம் லோன் பெற்று வட்டி மேல் வட்டி கட்டி பாதிப்புக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டம் ஆழ்வார்கோயில் பகுதியை சேர்ந்த மினி வேன் டிரைவர் ஏ.ஆர்.சுமர் என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் ‘வட்டி எவ்வளவு போட்டாலும் கட்டலாம்னு உள்ளவங்க ஆன் லைன் லோன் எடுங்க, அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பம் நடத்திறவங்க தயவு செய்து ஆன்லைன் லோன் எடுக்காதீங்க. எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்,’ எனக் கூறியதோடு பாடல் பாடி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.