பொறம்போக்கு என சொல்லும் போது.. அந்த வலி எனக்கு மட்டும் தான் தெரியும் ; மேடையில் கண்கலங்கிய அமைச்சர் டிஆர்பி ராஜா!
பட்டா இல்லாதவர்களை பொறம்போக்கு என கூறியதை கேட்கும் வலி எனக்கு மட்டும்தான் தெரியும் என முக்குளம் சாத்தனூர் பட்டாவழங்கும் விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியபோது கண்கள் கலக்கம்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் முக்குளம் சாத்தனூர், கருவாக்குறிச்சி காலனி, தளிக்கோட்டை காலனி ஆகிய 3 கிராமங்களில் 80 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருந்தது .
இதையடுத்து, கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விடுபட்ட அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா உறுதியளித்தார்.
தேர்தல் முடிந்து, மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தவுடன் இக்கோரிக்கைள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் ஆகியோரிடம் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் நில சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அரசு நிலங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரே பட்டா வழங்கலாம் என்று புதிய அரசாணை தமிழக அரசால் அண்மையில் வெளியிடப்பட்டது..
இதையடுத்து கருவாக்குறிச்சி காலனி, தளிக்கோட்டை காலனி ஆகிய கிராமங்களை சேர்ந்த 584 குடும்பங்களுக்கு சுமார் 450 ஏக்கர் நிலங்களை பிரித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கான விழா 8ம் தேதி முக்குலம்சாத்தனூர் பகுதியில் நடைபெற்றது. இதில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டு பேசுகையில் தமிழகத்தில் அனைவருக்கும் பட்டா கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் கலைஞர் கருணாநிதிதான் .
பட்டா இல்லாத காரணத்தினால் இங்கு இருப்பவர்களை பொறம்போக்கு பொறம்போக்கு எனக்கூறியவர்கள் கேள்விபட்டு உங்களுக்கு வேண்டுமானால் சிரிப்பு வரலாம் ஆனால் அந்த வலி எனக்கு மட்டும்தான் தெரியும் ( என்று கூறியபோது கண்கலங்கிவிட்டார் ) இனி சொந்த மண்ணில் சொந்த வீட்டில் இருப்பதுதான் திராவிடமாடல் ஆட்சிக்கு கிடைத்திருக்கின்ற மிக பெரிய வெற்றி அதுமட்டுமல்லாமல் கொடுக்கின்ற அனைத்து பட்டாக்களும் பெண்கள் கையில் கொடுத்து அழகுபார்பதுதான் திராவிடமாடல் ஆட்சி .
தேர்தல் நேரத்திற்கு பிறகு கரையை பார்த்து வேலைசெய்யும் ஆள் நானில்லை அப்படி எனது தாத்தா கலைஞர் என்னை வளர்க்கவில்லை என்றார்.
அதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி அவர்களது நீண்ட ஆண்டுகால கனவினை நினைவாக்கினார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் சாருஸ்ரீ , மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ,வருவாய்கோட்டாட்சியர் கீர்த்தணாமணி , ஊராட்சிமன்ற தலைவர் தேசபந்து உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.