உதகையில் தேனீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் மிதந்தது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தேனீர் கடையில் இன்று காலை கடையின் உரிமையாளர் உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையிலிருந்து ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து, கடைக்கு வந்து பாலை சூடு செய்வதற்காக பாத்திரத்தில் பாக்கெட்டை பிரித்து கொட்டியுள்ளார். அப்பொழுது பால் முழுவதும் வெள்ளை புழுக்கள் மிகுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரி பாக்கெட் மட்டும் பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அந்த பாக்கெட்டை சோதனை செய்த பொழுது பாக்கெட் ஆனது இன்றைய தேதியில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
மேலும், இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கையில், நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த எண் கொண்ட ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், தொடர்ந்து இதனை அடுத்து ஆய்வு அறிக்கை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் மிக அதிகமான மக்கள் ஆவின் பாலை பயன்படுத்தி வரும் நிலையில், பால் பாக்கெட்டில் பு ழு மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.