திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித் (22) பட்டதாரி.முசிறி அருகே உள்ள முத்தையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா (24). பட்டதாரி.
இருவரும் கல்லூரிக்கு செல்லும் போது பேருந்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 28ஆம் தேதி துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் மாரியம்மன் கோயிலில் வினித் – சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று துறையூர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். நீதிமன்ற நடுவர் விசாரணை செய்து வினித் ஷர்மிளா இருவரும் காணாமல் போனது பற்றி புகார் பெறப்பட்டுள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து புதுமண ஜோடிகளை போலீசார் முசிறி குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர் படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்திற்கு பெண்ணின் உறவினர்கள் வந்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு நீதிமன்ற வளாகத்தில் அதிகரிக்கப்பட்டது.
பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வாணி மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் புதுமணத் தம்பதிகளை போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு அளித்து புதுமண ஜோடிகளை அனுப்பி வைத்தனர். இச்ச சம்பவத்தால் நீதிமன்ற வளாகம்மற்றும் காவல் நிலைய வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.