வருவாய்த்துறை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த சித்திலிங்கமடம் கிராமத்தில் கடையடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை செய்ய வந்த அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுதும் நவம்பர் ஒன்றாம் தேதி ஊராட்சி தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்திருந்தன. அனைத்து ஊராட்சிகளையும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சித்திலிமடம் கிராம எல்லையை பிரித்து எடப்பாளையம் தனி வருவாய் கிராமமாக பிரிப்பதை கண்டித்து இன்று கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சித்திலிங்கமடம் கிராமத்தில் உள்ள 50 க்கும் மேற்ப்பட்ட கடைகளை அடைத்தும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சித்திலிங்கமடம் கிராமத்தில் கடையடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்த சென்ற உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சித்தலிங்கமடம் ஊராட்சியை பிரித்து எடப்பாளையம் தனி வருவாய் கிராமமாக செய்வதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கொட்டுமழையிலும் பேச்சுவார்த்தை செய்ய வந்த அமைச்சர் பொன்முடி சித்தலிங்கமடம் புதுப்பாளையம் இரண்டு கிராம மக்கள் கோரிக்கையை அடுத்து தான் இது போன்று நடவடிக்கை மேற்கொண்டு இருக்கின்றன.
உங்களை யாரோ தூண்டிவிடுகிறார்கள் ஒரு மாத காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சித்திலிங்கமடம் கிராமத்திற்கு வர உள்ளன. மேலும் திமுக ஆட்சியில் தான் இந்த கிராமத்திற்கு மகளிர் மேல்நிலைப்பள்ளி கொண்டுவரப்பட்டன என தெரிவித்தார்.
அப்பொழுது திடீரென பொதுமக்கள் பகுதியில் ஒருவர் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது அப்படி என்று சொன்னபோது கோபப்பட்ட அமைச்சர் பொன்முடி 10 வருஷமா யார் ஆட்சியில் இருந்தது அப்ப கேட்க வேண்டியது தானே என்ன கோபமாக பேசினார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்களிடையே ஒரு நபர் அதிமுக,திமுக என கட்சி பற்றி எல்லாம் பேசாதீங்க நீங்க அப்படின்னு சொல்லி சத்தம்மிட்டனர் . இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து அமைச்சர் பொன்முடி கிளம்பி சென்று விட்டார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.