பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்பொழுது, பிரதமர் மோடி ஒடிசாவிலே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது தமிழர்களை திருடர்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் தமிழகத்திற்கு வருகை தரும் பொழுது மட்டும் தமிழர்கள், தமிழ், திருவள்ளுவர், வேலுநாச்சியார், மருது பாண்டியர், என்று பேசுகிறார். ஆனால், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது.
மேலும் படிக்க: மளிகை கடையில் பெண்ணிடம் நகை பறித்த இருவரில் ஒருவர் மரணம்.. மற்றொரு இளைஞர் கைது!
எனவே தமிழர்களை வஞ்சிக்கும் மோடிக்கு எதிராக கருப்பு கொடியேந்தி கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் வேங்கை ராஜா, முகமது அலியார், அப்பாஸ் மந்திரி, மொழி போர்த்தியாகி ராமு ராமசாமி, அப்துல் ரகுமான், கார்த்திக், பாரதி, ஜோதி ராமலிங்கம், உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நகர் வடக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.