சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்காணிப்பு குழுக்களுக்கான அரசாணையை வருவாய்த்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.
நீர்நிலை ஆக்கிரமிப்பை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 3 குழுக்களை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை வருவாய்த்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.
இந்த குழுவில் வருவாய்த்துறை செயலாளர், குடிநீர் வழங்கல் துறை செயலாளர், நீர்வளத்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மண்டல அளவிலான முதல் கண்காணிப்பு குழுவின் தலைவராக வருவாய் கோட்டாட்சியர் இருப்பார் என்றும் வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் முதல் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட 2வது கண்காணிப்பு குழுவின் மாவட்ட எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர், பஞ்சாயத்து அதிகாரிகள் ஆகியோர் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் நீர்நிலை ஆக்கிரமிப்பை கண்காணிக்க திருத்தி அமைக்கப்பட்ட 3வது குழுவின் தலைவராக தலைமைச் செயலாளர் செயல்படுவார் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.